24

Nov

2013

நாமவிழா வாழ்த்துக்கள்

 

நட
நடந்தவை நல்லதற்கே
நடப்பது
நாளைய உலகிற்கு!
 
நடந்தது
தெருமுனைதான்
நடப்பது
திருப்புமுனை!
 
நடப்பது
பாதைக்காக அல்ல
நடப்பது
பக்குவத்திற்காக!
 
நடக்கும்போது
நாற்புறமும் தெரியும்
நடக்கும் போது
நம் பலமும் புரியும்
 
நட
நாலும் நடக்கும்
நடக்கும் போது – பின்னால்
நாலு பேரும் நடப்பார்கள்
 
நடக்கும் போது
நல்லவையும் நடக்கும்
நடக்கும்போது
நம் பாதங்கள்
பள்ளங்களையும் கடக்கும்
 
 
நடக்கும்போது – பல
தடைகளும் தகரும்;
நடக்கும் போது – பல
விடைகளும் கிடைக்கும்
 
நடந்த தடங்கள்;தான்
பாதையாகிறது
நாளைய உலகமும்
அதைத்தான்
எதிர்பார்க்கிறது
 
பயணம் முடியவில்லை
பாதைகள் மூடியிருக்கிறது
சூரியன் வந்துவிட்டால்
பனிக்குப் பணியில்லை
 
நட
நம்பிக்கையோடு
நல்லதே நடக்கும்
 
நம் செயல்களுக்கெல்லாம்
நல்லவை
இறைவனிடமிருந்து கிடைக்கும்
இறைவன் ஆசியோடு – எந்நாளும் 
இனிதே மலர

இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

ARCHIVES